இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் அடுத்த படத்தில் 4 ஹீரோயின்கள்!

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் அடுத்த படத்தில் 4 ஹீரோயின்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏஎல் விஜய் இயக்கி முடித்துள்ள ’தலைவி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் மாதமே இந்த திரைப்படம் வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பதும், எத்தனை மாதங்கள் ஆனாலும் இந்த படம் திரையரங்குகளில் தான் ரிலீஸ் ஆக செய்ய வேண்டும் என்பதில் படக்குழுவினர் உறுதியாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் விஜய் அடுத்ததாக தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஓடிடி பிளாட்பாரத்திற்காக ஒரு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்டது என்றும், இந்த படத்தில் நான்கு முக்கிய நடிகைகள் நடிக்க உள்ளனர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

நிவேதா பெத்துராஜ், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விசாகா சென் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் ஓடிடிக்காக தயாராக இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் ஒரு குறுகிய கால தயாரிப்பு என்பதால் ’தலைவி’ ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே ஓடிடியில் ரிலீசாகும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES