அந்த நடிகருக்காக தான் ரிஸ்க் எடுத்தேன் - நடிகை ப்ரியாமணி பேட்டி

அந்த நடிகருக்காக தான் ரிஸ்க் எடுத்தேன் - நடிகை ப்ரியாமணி பேட்டி

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் நடிகை ப்ரியாமணி.

திருமணத்திற்கு பிறகு மீண்டும் திரையுலகில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகை ப்ரியாமணி தற்போது தி பேமிலிமேன் 2 வெப்சீரியலில் நடித்துள்ளார்.

தற்போது இந்த வெப்சீரியலின் ப்ரோமோஷன் வேளைகளில் இருக்கும் நடிகை ப்ரியாமணி சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

இதில் பேசிய நடிகை ப்ரியாமணி " செகண்ட் இன்னிங்சில் வலுவான கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். முக்கியமாக தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்கும் நாரப்பா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறேன்.

நான் எப்போதுமே வெங்கடேசுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுவேன். இவருடன் நடிப்பதற்கு முன்பு மூன்று முறை வாய்ப்பு வந்தபோது கால்சீட் பிரச்சினையால் நடிக்க முடியாமல் போனது.

அதன்காரணமாகவே நாரப்பா பட வாய்ப்பு வந்தபோது பல படங்கள் கைவசம் இருந்தபோதும் மற்ற படங்களுக்கு கொடுத்திருந்த அணைத்து கால்சீட்களை வாங்கி இந்த படத்திற்கு கொடுத்து நடித்தேன். வெங்கடேஷ் படம் என்பதால் மட்டுமே இந்த ரிஸ்க்கை எடுத்தேன்'' என கூறியுள்ளார்.   

LATEST News

Trending News

HOT GALLERIES