சிம்புவுக்காக பணியை ஆரம்பித்த ஏ.ஆர்.ரஹ்மான்: விரைவில் படப்பிடிப்பு என தகவல்!

சிம்புவுக்காக பணியை ஆரம்பித்த ஏ.ஆர்.ரஹ்மான்: விரைவில் படப்பிடிப்பு என தகவல்!

சிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் பாடல் கம்போசிங் பணியை இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் ஆரம்பித்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

சிம்பு நடித்துள்ள ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் சிம்பு அடுத்ததாக ’பத்து தல’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா என்பவர் இயக்கவுள்ள இந்த படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ’முஃப்தி’ என்ற திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு கேங்க்ஸ்டர் கேரக்டரிலும், கவுதம் கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் இசை அமைக்க இருப்பதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்திற்கான பாடல் கம்போசிங் பணியை அவர் தொடங்கி விட்டதாகவும் இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

15 வருடங்களுக்கு முன் ஏஆர் ரஹ்மான் மற்றும் கிருஷ்ணா இணைந்த ’சில்லுனு ஒரு காதல்’ படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட்டான நிலையில் அதே போன்று இந்த படத்தின் பாடல்களும் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கும் இந்த படத்தில் கலையரசன், அசுரன் தீஜே உள்பட பலர் நடிக்கவுள்ளனர் என்பதும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES