இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் விக்ரம் முதலில் நடித்திருக்க வேண்டியது இந்த படத்தில் தான், ராவணன் இல்லை!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் விக்ரம் முதலில் நடித்திருக்க வேண்டியது இந்த படத்தில் தான், ராவணன் இல்லை!

நடிகர் விக்ரம் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் விளங்குபவர்.

இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது, அந்த வகையில் இவர் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் பெரியளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் அப்படத்தை முடித்துவிட்டு சீயான் 60, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடிக்கவுள்ள்ளார் விக்ரம்.

இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம்-விக்ரம் கூட்டணியில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ராவணன். ஆனால் இப்படத்திற்க்கு முன்பே இந்த கூட்டணி அமைந்திருக்க வேண்டியதாம்.

ஆம் 1995 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான பம்பாய் திரைப்படத்தில் முதலில் நடிக்க தேர்வானதே விக்ரம் தான்.

ஆனால் விக்ரம் வேறுறொரு படத்திற்காக தாடி மீசையெலாம் வளர்த்திருந்தால் பம்பாய் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.

LATEST News

Trending News

HOT GALLERIES