தொழிலதிபருடன் ரகசிய நெருக்கம் காட்டும் பிரபல நடிகை? திருமணம் குறித்து ஷாக்காகும் கீர்த்தி..
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். மலையாள மொழில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் கீதாஞ்சலி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார்.
இதையடுத்து ரஜினி முருகன் படத்தில் நடித்து புகழ் பெற்றார். பல முன்னணி நடிகர்கள் படங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து தேசியவிருதினையும் பெற்றார். தற்போது அண்ணாத்த, சாணிக்காயிதம் படங்களில் நடித்தும் வருகிறார்.
அனைத்து பிரபலங்களை போலவும் கீர்த்தி சுரேஷும் சில கிசுகிசுக்களிலும் சிக்கி வருகிறார். சமீபத்தில் ராக்ஸ்டார் அனிருத்துடன் காதலில் இருப்பதாக செய்தி வெளியாகி, அதை கீர்த்தி தரப்பில் நண்பர்கள் என்று முற்றுப்புள்ளி வைத்தனர். இதுபற்றி கீர்த்தி என்னைபற்றி இப்படி எழுதுவதற்கு பதில் வேற நல்ல விஷயங்களை பகிருங்கள் என்றுகூறியிருந்தார்.
ந்நிலையில் மீண்டும் பிரபல தொழிலதிபருடன் ரகசிய நெருக்கம் காட்டியும் நட்சத்திர ஹோட்டல்களில் சந்தித்து கொள்வதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கள் எழ ஆரம்பித்துள்ளது.
இதுபற்றி கீர்த்தி சுரேஷ், திருமணம் செய்து கொள்ளும் என்ன இப்போதைக்கு இல்லை. என் வளர்ச்சியில் அதிக ஈடுபாடும் படங்களில் கவனமும் செலுத்தி வருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.