சன் டிவியின் ரோஜா சீரியலின் முக்கிய விஷயம் திடீர் மாற்றம்- ரசிகர்களே கவனித்தீர்களா?
சன் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் ரோஜா.
இந்த சீரியல் இடையில் TRPயில் இரண்டாம் இடம் பிடித்திருந்தது, தற்போது கதையாசிரியர் மாற்றத்திற்கு பிறகு சீரியல் ஹிட்டாக ஓடுகிறது. மீண்டும் சீரியல் முதல் இடத்தை பிடித்துவிட்டது.
தமிழ்நாட்டில் கொரோனா அதிகரிப்பு காரணமாக முழு லாக் டவுன் போடப்பட்டு இருந்தது, இதனால் சீரியல் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே சீரியல் ஒளிபரப்பில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, சீரியல்களின் பழைய எபிசோடுகள் வரும் திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாக உள்ளது.
அதேபோல் சன் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலான ரோஜா இனி நாள்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.