பிரபல இயக்குனரின் தாயார் கொரோனாவுக்கு பலி: திரையுலகினர் இரங்கல்

பிரபல இயக்குனரின் தாயார் கொரோனாவுக்கு பலி: திரையுலகினர் இரங்கல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தினசரி தமிழகத்தில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி கொண்டு இருக்கின்றனர் என்பதும் அவர்களில் சிலர் திரையுலகைச் சேர்ந்தவர்கள் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பிரபல இயக்குனர் ஒருவரின் தாயார் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். இதனையடுத்து திரையுலகினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

‘உல்லாசம்’ ’விசில்’ உள்பட ஒருசில படங்களை இயக்கிய இரட்டையர்கள் ஜேடி-ஜெர்ரி. இந்த இரட்டையர்கள் தற்போது சரவணா ஸ்டோர்ஸ் அருள் சரவணன் நடித்துவரும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்கள் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இரட்டை இயக்குனர்களில் ஒருவராக ஜெர்ரி அவர்களின் தாயார் சோலையம்மாள் அவர்கள் கொரோனா தோற்று பரவியதை அடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 78. ஜெர்ரி தாயார் மறைவுக்கு தற்போது திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி சிந்துஜா மற்றும் நடிகர் நிதிஷ் வீரா ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் இன்று இயக்குனர் ஜெர்ரியின் தாயாரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES