சகோதரன் பற்றி அமலாபாலின் உருக்கமான பதிவு
சகோதரர் அபிஜித் குறித்து ஒரு உருக்கமான கருத்தை நடிகை அமலாபால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அமலா பால். பிசியான நடிகையான அமலா பால் தற்போது கொரானா காலம் என்பதால் வீட்டில் குடும்பத்துடன் பொழுதை செலவிட்டு வருகிறார். அமலா பால் அவரது சகோதரர் அபிஜித் மீது அதிகம் அன்பு கொண்டவர்.
தனது சகோதரர் அபிஜித் குறித்து ஒரு உருக்கமான கருத்தை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், உன்னை எனது சகோதரன் என்பதை, விட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மேலே இருக்கிறாய். எனக்கு அப்பா, அம்மா அன்பு கிடைக்காதபோது, அப்பாவும், அம்மாவாகவும் இருக்கிறாய். எனது வாழ்க்கையின் கடினமான நேரங்களில் என்னோடு இருந்து என்னை சந்தோஷப்படுத்தியிருக்கிறார்.
இதுவரை ஒரு முறை கூட என்னை குறை கூறியதில்லை. என்னை வழிநடத்தியது நீ, என் வீடு, குடும்பம், ஆசீர்வாதம், சிறந்த நண்பன் ஆகியவை எல்லாமே நீதான். ஜிது நீ நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உன்னை நேசிக்கிறேன் என ரொம்பவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.