ஜோதிகா நடித்த படத்திற்கு தேசிய விருது.. மகிழ்ச்சியில் அவர் சொன்ன விஷயம்
நடிகை ஜோதிகா தற்போது மும்பையில் செட்டில் ஆகிவிட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அவர் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்த போவதாகவும் கூறப்பட்டது.
அவர் நடித்த ஹிந்தி படத்திற்க்கு தேசிய விருது தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஸ்ரீகாந்த்
ராஜ்குமார் ராவ் உடன் ஜோதிகா நடித்து இருந்த ஸ்ரீகாந்த் என்ற படம் சிறந்த ஹிந்தி படமாக விருது பெறுகிறது. இது பெருமையாக இருப்பதாக ஜோதிகா இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.
"பட்ஜெட் தொடங்கி படம் ரிலீஸ் ஆகும் வரை பல சிக்கல்களை சந்தித்தாலும், படம் வெற்றி பெற்றால் படக்குழுவுக்கு அது எமோஷனாக இருக்கும். பார்வையற்ற ஒருவரும் சாதிக்க முடியும் என காட்டிய படம் இது."
"25 வருடங்களுக்கு பின் நான் நடித்த முதல் ஹிந்தி படம் இது என்பதால் இந்த ரோல் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்" என ஜோதிகா கூறி இருக்கிறார்.