சாய் பல்லவி படுக்கைக்கு சம்மதித்தால் தான்.. அந்த வேலை.. பிரபல நடிகர் உடைத்த உண்மை!

சாய் பல்லவி படுக்கைக்கு சம்மதித்தால் தான்.. அந்த வேலை.. பிரபல நடிகர் உடைத்த உண்மை!

பிரபல நடிகை சாய் பல்லவி குறித்து, நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் அளித்த சமீபத்திய பேட்டி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சினிமாவில் பட வாய்ப்பு பெறுவதற்காக சில நடிகைகள் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் இருப்பதாகவும், ஆனால் சாய் பல்லவி இதில் விதிவிலக்கு எனவும் அவர் கூறியுள்ளார். 

ரங்கநாதனின் கூற்றுப்படி, “பல நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் வேறு வழி இல்லை. ஆனால், சாய் பல்லவி மருத்துவம் படித்தவர்.

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு சம்மதித்தால் தான் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்றால் அந்த வாய்ப்பை உதறிவிட்டு, மருத்துவர் வேலையை தொடர்ந்து நல்ல வருமானம் ஈட்டுவார். 

அவருக்கு இது ஒரு தேர்வு, கட்டாயம் இல்லை.” மேலும், “நடிகை நதியாவுக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த நடிகை சாய் பல்லவி” எனவும் அவர் பாராட்டியுள்ளார். 

சாய் பல்லவி, பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி, அமரன், தண்டேல் போன்ற படங்களில் தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர். கிளாமர் வேடங்களைத் தவிர்த்து, கதாபாத்திரத்தின் ஆழத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என பெயர் பெற்றவர். 

ரங்கநாதனின் இந்தப் பேட்டி, சினிமாவில் நிலவும் சர்ச்சைகளை மீண்டும் விவாதத்திற்கு கொண்டு வந்துள்ளது. இருப்பினும், சாய் பல்லவி இதுகுறித்து இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

LATEST News

Trending News