பணத்துக்கு நான்.. அந்த நேரத்தில் உடலுறவு.. நண்பரின் மனைவி செய்த துரோகம்.. நடிகை ஷர்மிளா பகீர்!
மலையாள திரையுலகில் சமீபகாலமாக ஹேமா கமிட்டி அறிக்கையால் பல முக்கிய பிரச்சனைகள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மலையாள நடிகை சார்மிளா, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தனது திருமண வாழ்க்கை, விவாகரத்து மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்கள் குறித்து உருக்கமாக பகிர்ந்து கொண்டார்.
சார்மிளா, தனது வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லை என்று கூறினார். “பணத்தில் வசதி, அப்பா-அம்மாவின் செல்லம், சினிமா வாழ்க்கையும் சிறப்பாக இருந்தது,” என்று தெரிவித்தார்.
ஆனால், தனது திருமண வாழ்க்கையில் தவறான முடிவுகள் எடுத்ததாக அவர் வருத்தப்பட்டார். பெற்றோர் மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தபோது, ஒருவர் அவரை காதலிப்பதாக கூறி திருமணத்திற்கு முன்மொழிந்தார்.
ஆனால், திருமண அழைப்பிதழ்கள் விநியோகிக்கப்பட்ட பிறகு, திருமண நாளன்று அவர் வரவில்லை. இதனால் மனமுடைந்த சார்மிளா, கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். “இப்போது அவர் நன்றாக இருக்கிறார்,” என்று அவர் கூறினார்.
பின்னர், மற்றொரு நபரை திருமணம் செய்த சார்மிளாவுக்கு முதல் கணவரின் துரோகம் தெரியவந்தது. “அவர் என்னை பணத்திற்காகவும், தனது நண்பரின் மனைவியுயை உடலுறவுக்காகவும் வச்சிகிட்டு ஜாலியா இருந்தார்,” என்று கூறி, அவரை விவாகரத்து செய்தார்.
இரண்டாவது திருமணமும் சிக்கல்களை கொண்டு வந்தது. கணவரும், மாமியாரும் அவரது படப்பிடிப்பு தாமதங்களை கேள்வி கேட்டு தொந்தரவு செய்தனர். “சினிமாவையும் வேண்டும், குடும்பத்தையும் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். சினிமாவை விட்டு விடு என்று கூறியிருந்தால், நான் வந்திருப்பேன்,” என்றார்.
ஒருமுறை, தனது மகனை பள்ளியில் இருந்து அழைத்து வர நடந்து சென்றபோது, ஒரு நபர் என்னை பின்புறத்தில் தட்டிச் சென்றார். இதை அருகிலிருந்த காவலரிடம் புகார் செய்தபோது, “நீங்கள் நடிகை, இப்படி நடப்பது சகஜம். ஏன் நடந்து வருகிறீர்கள்?” என்று அவர் கேவலமாக பதிலளித்தார்.
இதற்கிடையில், இரண்டாவது கணவர் சார்மிளாவை நடிகையாக பார்க்கவில்லை. முதலில் மத வேறுபாடுகளுக்கு சம்மதித்திருந்த அவர், பின்னர் இந்து மதத்திற்கு மாற வற்புறுத்தியதால், அவரையும் விவாகரத்து செய்தார்.
“நான் பொருத்தமின்றி வாழ மறுத்ததும் இந்த பிரச்சனைகளுக்கு காரணம். ஆனால், என்னுடன் வாழ்ந்தவர்கள், மற்றவர்களிடமிருந்து என்னை காப்பாற்றியதற்கு நன்றி கூற வேண்டும்,” என்று உணர்ச்சிபூர்வமாக கூறினார்.
ஹேமா கமிட்டி அறிக்கையின் பின்னணியில், சார்மிளாவின் இந்த பேட்டி மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை மேலும் வெளிப்படுத்துகிறது.