அவன் மட்டும் எப்படி தப்பிச்சான்? விமான விபத்து குறித்து நடிகை கஸ்தூரி கூறிய திடுக்கிடும் தகவல்!
நடிகை கஸ்தூரி சமீபத்திய பேட்டி ஒன்றில், அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் குறித்து இணையத்தில் பரவும் தவறான தகவல்களுக்கு விளக்கமளித்தார்.
ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (AI171), புறப்பட்ட சில நொடிகளில் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 242 பயணிகளில் 241 பேர் உயிரிழந்த நிலையில், 11A இருக்கையில் அமர்ந்திருந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் மட்டும் அதிசயமாக உயிர் பிழைத்தார்.
கஸ்தூரி தனது பேட்டியில், “இத்தனை பேர் பயணித்த விமானத்தில் ஒருவர் மட்டும் உயிர் தப்பியது மிகப்பெரிய அதிசயம். ஆனால், சிலர் ‘இவர் மட்டும் எப்படி தப்பித்தார்? இவர்தான் விபத்துக்கு காரணமாக இருக்கலாம்’ என தவறான யூகங்களை பரப்புகின்றனர்.
விஸ்வாஸ் மீது சந்தேகப்பட எந்த ஆதாரமும் இல்லை. அவரை அனைவரும் ஒரு அதிசயமாகவே பார்க்கின்றனர்,” என்றார். மேலும், விஸ்வாஸ் லண்டனில் பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும், அவரது சகோதரர் அஜய் அந்த விமானத்தில் உயிரிழந்தவர் என்றும் குறிப்பிட்டார்.
“இத்தனை பேர் உயிரிழந்தபோது ஒருவர் உயிர் பிழைத்ததற்கு மகிழ்ச்சி அடைய வேண்டுமே தவிர, சர்ச்சைகளை கிளப்புவது தவறு,” என கஸ்தூரி அதிரடியாகப் பேசினார். இந்த பேட்டி வீடியோ இணையத்தில் வைரலாகி, பலரும் அவரது தெளிவான பதிலைப் பாராட்டி வருகின்றனர்.