திருமணத்துக்கு முன்பே ஐஸ்வர்யா ராய்க்கு ஆண் குழந்தையா?
நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு திருமணத்திற்கு முன்பு ஆண்குழந்தை என்ற சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.
உலக அழகி என்று ரசிகர்களால் புகழப்படும் நடிகை ஐஸ்வர்யா ராய், இருவர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார்.
பின்பு தமிழ் மட்டுமின்றி பாலிவுடு் படங்களிலும் கலக்கிய இவர், நடிகர் அமிதாப்பச்சனின் மகனான நடிகர் அபிஷேக் பச்சனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு ஆராத்யா என்ற மகளும் உள்ளார். சமீபத்தில் தாய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஒரே மாதிரியான ஆடையில் தாயுடன் வலம் வருகின்றார்.
அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு என்றும் பிரிந்து வாழ்வதாகவும் தகவல் வெளியாகி வருகின்றது. இதன் உண்மை விபரம் தற்போது வரை வெளியாகவில்லை.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு முன்பு மகன் ஒருவர் உள்ளதாக தற்போது பரபரப்பாக பேசப்படுகின்றது.
அதாவது சங்கீத் குமார் என்ற நபர் வெளியிட்ட காணொளியில், ஐஸ்வர்யா ராயின் 15வது வயதில் தான் லண்டனில் `IVF-In Vitro Fertilization` மூலம் பிறந்ததாகத் தெரிவித்தார்.
தனக்குத் தாய் ஐஸ்வர்யா ராய் என்றும் லண்டனில் பிறந்த பிறகு அவர்களது பெற்றோர் தன்னை விசாகப்பட்டினத்திற்கு அழைத்து வந்ததாகவும் கூறியுள்ளார். தனது பிறப்பு தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் அதில் கூறியுள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு எழுந்த சர்ச்சைக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. ஆம் குறித்த நபர் யார் என்று விசாரணை மேற்கொண்டதில், இவர் மனநிலை சரியில்லாதவர் என்பது தெரியவந்துள்ளது.
தற்போது இந்த சர்ச்சையின் உண்மைத்தன்மையை தெரிந்து கொண்ட ரசிகர்கள் தற்போது பெருமூச்சு விடுகின்றனர்.