ஹோட்டல் அறையில் வைத்து தகாத முறையில் தொட்டார்..! இயக்குனர் மீது நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு..!

ஹோட்டல் அறையில் வைத்து தகாத முறையில் தொட்டார்..! இயக்குனர் மீது நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு..!

சினிமா துறையில் நடிகைகள் தங்களது தொழிலை தொடர்ந்து நீடிப்பதெல்லாம் அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை .

நடிக்க வந்துவிட்டாலே எல்லாவற்றிற்கும் அடங்கிப் போக வேண்டும். என்ன கேட்டாலும் அதை செய்து கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனைக்கு தள்ளப்படுகிறார்கள் .

தங்களது கனவு இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என நினைக்கும் நடிகைகள் இதுபோன்று ஆண் ஆதிக்கத்திற்கும், பாலியல் தொல்லைக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.

அட்ஜெஸ்ட்மென்ட் எல்லாம் முடியாது… வேண்டாம் என மறுக்கும் நடிகைகள் அந்த துறையை விட்டு ஓட வேண்டியதுதான். திறமை இருந்தாலும் வேறு வழியில்லை.

திறமை மட்டும் வைத்துக்கொண்டு முன்னேற வேண்டும் என்றால் இங்கு அது வேலைக்காகாது என்ற ஒரு கட்டாயத்தில் தான் தற்போது சினிமாத்துறை இயங்கிக் கொண்டிருக்கிறது .

உனக்கு என்னதான் திறமை இருந்தாலும் கூட நீ இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், லைட்ஸ்மேன், கேமரா மேன் இப்படி பல பேருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டால் மட்டும் தான் உன்னால் உன்னுடைய கடமை நோக்கி செல்ல முடியும்.

ஆனால் நீ மாட்டேன் முடியாது என தவிர்த்து விட்டு உன்னுடைய திறமையை மட்டும் காட்டினால் முன்னுக்கு வர முடியும் என்று நினைத்தால் அது உன்னால் ஆகாத காரியம் என பல நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட்டை அனுபவித்த நடிகைகள் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்கள்.

இதனால் திறமையுள்ள பல நடிகைகள் தன்னுடைய திறமையை காட்ட முடியாமலே வீட்டுக்குள்ளே முடங்கி போய் விடுகிறார்கள்.

அப்படித்தான் நடிகைகளாக நடிக்க வரும் நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.

பல நடிகைகள் அதை எதிர்கொண்டதை பற்றி வெளிப்படையாக இப்போது வெளியில் வந்து பேட்டிகளில் தெரிவித்து இருக்கிறார்கள் .

அப்படித்தான் தற்போது தனக்கு நடந்த மிகவும் கொடுமையான விஷயத்தை வெளிப்படையாக பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார் நடிகை ஸ்ரீலேகா மித்ரா .

பிரபல வங்காள சினிமா நடிகையான ஸ்ரீலேகா மித்ரா வங்க மொழியில் கிட்டத்தட்ட 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நடித்து பிரபலமான வங்காள நடிகையாக இருந்து வருகிறார்.

இவர் இது தவிர இந்தி மலையாளம் உள்ளிட்ட சினிமாக்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்க.

இது தவிர ஹிந்தி மற்றும் மலையாள சினிமாவில் நடித்தவரும் நடிகர் ஸ்ரீலேகா தற்போது பிரபலமான கேரள இயக்குனரான ரஞ்சித் மீது பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்திருக்கிறார் .

கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் பலேரி மாணிக்யம் இப்படத்தின் ஆடிஷனுக்காக நடிகை ஸ்ரீலங்கா மித்ரா கலந்து கொண்டாராம்.

அப்போது கொச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் படத்தைப் பற்றி இயக்குனர் ரஞ்சித் பேசிக் கொண்டிருக்கும்போது தன்னை தகாத முறையில் தொட்டதாக அதனால் உடனே பயந்து போய் அந்த இடத்தை விட்டு சென்று படத்தில் நடிக்க போவதில்லை என முடிவெடுத்ததாக கூறி இருக்கிறார்.

இது பாலியல் வன்கொடுமை இல்லை என்றாலும் ரஞ்சித்தின் நடத்தை பார்க்கும்போது அது போன்ற எண்ணம் தான் எனக்கு ஏற்பட்டது . அந்த உணர்வை எனக்கு ஏற்படுத்தி விட்டார்.

அது எனக்கு மிகுந்த வேதனையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியதுஎன கூறியுள்ளார். நடிகை ஸ்ரீலேகா மித்ராவின் இந்த பரபரப்பு புகாருக்கு பதில் அளித்திருக்கும் இயக்குனர் ரஞ்சித்…

இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டவன் நான்தான். நடிகை ஸ்ரீலேகா இதை சட்டபூர்வமாக தொடரும் பட்சத்தில் நானும் அதை அப்படியே எதிர் கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

தற்போது இந்த சம்பவம் மலையாள திரைப்பட முறையில் மிகவும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுவாக இது போன்ற பிரச்சினைகளை வெளிப்படையாக வந்து பேசும் நடிகைகளுக்கு தொல்லை கொடுத்தவர்கள் யாரும் அதற்கு பதிலே அளிக்க மாட்டார்கள்.

ஆனால் இயக்குனர் ரஞ்சித்தின் இந்த பதில் தான் மிகப்பெரிய ஆச்சர்யத்தையும் இந்த விஷயத்தின் மீதான எல்லோரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES