காமெடி நடிகர் மூன்றெழுத்து நடிகையுடன் நெருக்கம்... வயதான காலத்தில் வந்த பிரச்னை

காமெடி நடிகர் மூன்றெழுத்து நடிகையுடன் நெருக்கம்... வயதான காலத்தில் வந்த பிரச்னை

கோலிவுட்டில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக இருப்பவர் அவர். ஏராளமான படங்களில் நடித்திருக்கும் அவர் இப்போது ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்துவருகிறார். புகழின் உச்சியில் இருந்த அந்த நடிகரை சுற்றி சில பஞ்சாயத்துக்களும் தோன்றியிருக்கின்றன. முக்கியமாக பெண்கள் விஷயங்களில் அவர் கொஞ்சம் வீக் என்ற பேச்சும் எழுந்தது உண்டு. சூழல் இப்படி இருக்க வயதான காலத்தில் அவரை சுற்றி புது பஞ்சாயத்து எழுந்திருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் அந்த காமெடி நடிகரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. எந்தத் தலைமுறையினர் அவரது காமெடியை பார்த்தாலும் வயிறு வலிக்க சிரிப்பார்கள். அவர் நடிப்பில் உச்சத்தில் இருந்தபோது ஹீரோக்களுக்கு இணையான சம்பளத்தை பெற்றவர். தனது ஒவ்வொரு காமெடியிலும் வித்தியாசத்தை காட்டி தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார் நடிகர். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தவர் அவர்.

அவரது காமெடியை எந்தத் தலைமுறையினரும் பார்த்து சிரிப்பார்கள். இப்போது இருக்கும் 2கே கிட்ஸ்கூட நடிகரின் காமெடியை பார்த்து ரசித்து சிரித்துவருகிறார்கள். அதேசமயம் தன்னுடைய காமெடியில் எல்லோரையும் மட்டப்படுத்துகிறார் என்ற விமர்சனமும் எழுந்தது உண்டு. ஆனால் அதையெல்லாம் அவர் கண்டுகொள்வதில்லை. எவ்வளவு விமர்சனங்கள் அவர் காமெடி மீது வைக்கப்பட்டாலும் அதையெல்லாம் கடந்து ரசிக்கப்படுகிறது என்பதுதான் எதார்த்தமான உண்மை.

நாடகங்களில்தான் முதலில் நடிக்க ஆரம்பித்தார் அவர். அதற்கு பிறகு சினிமாக்களில் வாய்ப்பு கிடைத்து நடிக்க ஆரம்பித்த பிறகு ஒருநாளைக்கு மட்டும் கிட்டத்தட்ட லட்சக்கணக்கில் சம்பளம் பெற்றவர். அதன் காரணமாக பீக்கில் இருந்த ஹீரோக்களுக்கு இணையான சம்பளத்தை பெற்றார் என்ற பேச்சும் உண்டு. பல நடிகர்கள் அவரது கால்ஷீட்டுக்காக காத்திருந்த சம்பவங்களும் அரேங்கேறின என்பது நினைவுகூரத்தக்கது.

நடிகர் எவ்வளவுக்கு எவ்வளவு உச்சத்தில் இருந்தாரோ அந்த சமயத்தில் அவ்வளவு சர்ச்சைகளையும் சந்தித்தவர். முக்கியமாக நடிகைகள் விஷயத்தில் ரொம்பவே வீக் என்ற பேச்சு காலங்காலமாக உண்டு. தன்னுடன் நடிக்கும் துணை நடிகைகளை வேட்டையாடும் அவர்; முன்னணி ஹீரோயின்களுடன் சேர்த்து வைத்தும் கிசுகிசுக்கப்பட்டார். தான் நடிக்கும் படங்களில் நடிக்கும் ஹீரோயின்களை எப்படியாவது ருசி பார்த்துவிட வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தவராம் அவர்.

இந்நிலையில் அந்த நடிகர் குறித்து புதிய கிசுகிசு ஒன்று கோடம்பாக்கத்தில் கிளம்பியிருக்கிறது. அதாவது தான் காமெடி ரோலில் நடித்த படங்களில் நடித்த மூன்றெழுத்து ஹீரோயினுடன் நடிகர் ஓவர் நெருக்கம் காண்பித்தாராம். ஒருகட்டத்தில் எப்படியோ நடிகையை தனது வலையில் சிக்க வைத்துவிட்டாராம் காமெடி நடிகர். நடிகையும் காமெடி நடிகர் சொன்னதெல்லாம் கேட்டுதான் சில காலம் நடந்தாராம்.

அந்தச் சமயத்தில் சென்னையில் பிரமாண்ட வீடு ஒன்றை பரிசாக கொடுத்தாராம். அந்த வீட்டில்தான் ஷூட்டிங் முடிந்து பல நாட்கள் தங்கிவிடுவாராம். அப்போது தேவையான அளவு நடிகை அனுபவித்து தீர்ப்பாராம். ஒருகட்டத்தில் நடிகருக்கு வயது ஆக ஆக இனி இவருடன் இருந்தால் செட் ஆகாது என்று சொல்லி வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டாராம் வானுலகத்து நடிகை. நிலைமை இப்படி இருக்க சமீபத்தில் நடிகரின் சொத்து விவரங்களை வாரிசுகள் தோண்டியிருக்கிறார்கள்.

அப்போது நடிகைக்கு நடிகர் வீடு கொடுத்த விஷயம் தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து அந்த நடிகையை தொடர்புகொண்டு ஒழுங்காக அப்பா கொடுத்த வீட்டை திரும்பி கொடுங்கள்; இல்லை அதற்குரிய பணத்தை கொடுங்கள் என்று கேட்டார்களாம். அதற்கு அவரோ கொடுக்க முடியாது என்று கறாராக சொல்லிவிட்டாராம். இதனால் கொந்தளித்த குடும்பத்தினர் ஒரு மாதம் டைம் தருகிறோம் இல்லையென்றால் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார்களாம். இதனால் நடிகை இப்போது செய்வதறியாது விழித்துக்கொண்டிருக்கிறாராம்.

LATEST News

Trending News