17 வயதில் 60 வயது கிழவன் என்னை அட்ஜெஸ்ட் பண்ண கேட்டான்!! சீரியல் நடிகை ஓப்பன் டாக்..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பாரப்பாகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் 3வில் மாரி என்ற ரோலில் நடித்து வந்தவர் நடிகை ரிஹானா. சமீபத்தில் சீரியலில் இருந்து விலகி ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் நடித்து வருகிறார். சமீபகாலமாக பேட்டிகளில் கசப்பான அனுபவங்களை பற்றி பகிர்ந்து வந்தார். முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது முதல் ஹோம் நர்ஸ் வேலை செய்யும் ஏற்பட்ட கஷ்டம் வரை பல அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்.
சமீபத்தில், ஹோம் நர்ஸ் வேலைக்கு ஒரு வீட்டிற்கு சென்றேன். அந்த வீட்டில் இருந்த 60 வயது முதியவர் என்னிடம் எதற்கு இந்த வேலைக்கு வருகிறாய் என்று கேட்டார். நான் என் திருமணத்திற்கு நகை வாங்க சீட்டு போடுகிறேன், அதற்காக இந்த வேலைக்கு வருகிறேன் என்றேன்.
பின் அந்த முதியவர், நீ இப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டாம். என்னை அனுசரித்து நடந்து கொண்டாலே திருமணத்திற்கு அனைத்து செலவையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினார்.
அதை கேட்டதும் நான் அதிர்ந்து போய்விட்டேன். அப்போது எனக்கு 17 வயது தான் இருக்கும். என்ன செய்வது என்று தெரியாமல் அவரிடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று ஒரு அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டேன்.
பின் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்து இந்த வீட்டில் வேலை செய்யமாட்டேன் என்று கூறி வேறு இடத்தை கேட்டு வாங்கினேன். இதுபோல் சில மோசமானவர்களும் இருக்கிறார்கள், நிறைய முதியவர்கள் என்னை ஆசிர்வாதம் பண்ணியிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
மேலும் பேசிய ரிஹானா, அண்மையில் தான் எனக்கு விவாகரத்தானது. அதுதொடர்பான ஆவணங்கள் அனைத்தும் என் கைக்கு இப்போது தான் கிடைத்தது. எனக்கு இரு குழந்தைகள் இருந்து எனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.
விதவையானாலும் விவாகரத்தானாலும் பெண்ணாக இருந்தாலும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் அவர்களை இந்த சமுதாயம் தப்பாகத்தான் பார்க்கும். ஆனால் கணவன் இல்லாமல் வாழும் பெண்ணுக்கு பல வகையான பிரச்சனைகள் வரும், இதனால் நிச்சயம் இரண்டாம் திருமணம் செய்து கொள்வேன் என்று ரிஹானா தெரிவித்துள்ளார்.