கணவரின் சகோதரர் பாலியல் தொல்லை.. சீரியல் நடிகை பரபரப்பு புகார்!
ஒருவரை ஒருவர் காதலித்து கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து மிகவும் பிரம்மாண்டமான முறையில் காதல் திருமணம் செய்து கொண்ட பல்வேறு நட்சத்திர நடிகர் -நடிகைகள், சீரியல் நடிகைகள், பிரபலங்கள் உள்ளிட்ட பல பேர் சில வருடங்களிலேயே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து ஒருவருக்கொருவர் விவாகரத்து செய்துக்கொள்கிறார்கள்.
அதன் பின் ஒருவரை மாற்றிய ஒருவர் குறை சொல்லிக் கொண்டும் யூடியூப் சேனல்களிலும், தொலைக்காட்சிகளிலும் பேட்டி கொடுத்து சமூக வலைதளங்களில் வைரலான செய்தியாக பார்க்கப்பட்டு வருகிறது.
தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. நட்சத்திரங்களின் வாழ்க்கை என்றாலே நிரந்தரமற்ற வாழ்க்கை என மக்கள் மனதில் பதிந்துவிட்டது.
ஆம், தற்போது அந்த லிஸ்டில் இடம் பிடித்திருப்பவர் தான் சீரியல் நடிகை தீபா, இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அன்பே சிவம்’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘பிரியமான தோழி’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானார்.
இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில், கணவரை விவாகரத்து செய்துவிட்டு மகனுடன் தனியாக வசித்துக்கொண்டு சீரியல்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் தான் தீபா மீண்டும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘பாக்கியலட்சுமி’ உள்ளிட்ட பல சீரியல்களில் தயாரிப்பு மேலாளராக பணி புரிந்த சாய் கணேஷ் பாபு என்பவரை பதிவுத்திருமணம் செய்துக்கொண்டார்.
ஆனால், தற்போது தீபா தனது இரண்டாவது கணவர் சாய் கணேஷ் பாபுவையும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், அவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பிரிந்த கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி சின்னத்திரை நடிகர் தீபா வழக்கு தொடர்ந்திருப்பது சீரியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த வழக்கு பதிவில் கணேஷ் பாபு என் குடும்பத்தினர் தன்னை ஜாதி ரீதியாக இழிவுபடுத்துவதாகவும் தீபா குற்றம் சாட்டியிருக்கிறார்.
மேலும், தனது கணவரின் சகோதரர் ரமணகிரிவாசன் என்பவர் தனக்கு தொடர்ந்து மனரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுத்து வருகிறார் என்று கூறி அதிரவைத்துள்ளார்.
இதன் காரணமாகத்தான் தனக்கும் தனது கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் தான் அவருடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.