உடலுறவின் போது இது முக்கியம்.. கூச்சமே இல்லாமல்கூறிய ரேஷ்மா ..!

உடலுறவின் போது இது முக்கியம்.. கூச்சமே இல்லாமல்கூறிய ரேஷ்மா ..!

தமிழ் மக்கள் மத்தியில் சீரியல் மூலமாக பிரபலமான நடிகைகளில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி முக்கியமானவர். ரேஷ்மா முதன்முதலாக அவரது திரை வாழ்க்கையை தெலுங்கு  டிவி சேனலில் தொடங்கினார். தெலுங்கு  டிவி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்த பொழுது அவருக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது.

ஆனால் தென்னிந்தியாவில் சின்னத்திரையை பொருத்தவரை தமிழில் அதிகமான வரவேற்பு அவருக்கு உண்டு என்பதை அறிந்து கொண்டார் ரேஷ்மா. அதனை தொடர்ந்து தமிழில் வாய்ப்புகளை பெற துவங்கினார்.

தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியலில் முதன்முதலாக அறிமுகமானார் ரேஷ்மா. அதற்கு பிறகு அவருக்கு திரைப்படங்களிலும் வாய்ப்புகள் கிடைத்தன. தெலுங்கு வட்டாரத்தை சேர்ந்த ரேஷ்மா பசுபுலேட்டி சாப்ட்வேர் துறையில் படிப்பை முடித்தார்.

ஆனால் அது தொடர்பான வேலைக்கு செல்லவில்லை. அதன் பிறகு டிவி 5 என்னும் ஆங்கில நியூஸ் சேனலில் பணிபுரிந்து வந்தார் ரேஷ்மா. அதற்கு பிறகுதான் அவருக்கு வம்சம் சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. சீரியல்களிலும் திரைப்படங்களிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அந்த ஒரு கதாபாத்திரம் அந்த திரைப்படத்திலேயே அதிகமான வரவேற்பை பெற்ற ஒரு கதாபாத்திரமாக இருந்தது.

இது ரேஷ்மாவிற்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. பொதுவாக இந்த வரவேற்பை பயன்படுத்திக் கொள்ளும் நடிகைகள் தொடர்ந்து சினிமாவில்தான் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்துவார்கள். ஆனால் ரேஷ்மாவை பொறுத்தவரை அவர் அதை பயன்படுத்திக்கொண்டு சின்ன திரையில் வாய்ப்புகளை பெற துவங்கினார்.

ஏற்கனவே சன் டிவியில் இவர் நடித்த வாணி ராணி சீரியலுக்கும் வம்சம் சீரியலுக்கும் ஓரளவு வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து சன்  டிவி நாடகங்களில் வாய்ப்பை பெற்றார் மரகதவீணை போன்ற சீரியலில் நடித்தார்.

இதனை தொடர்ந்து ராஜ்  டிவி, ஜீ தமிழ், வேந்தர் டிவி, ஸ்டார் விஜய் என்று அனைத்து டிவி சேனல்களிலும் சீரியல்களில் நடிக்க துவங்கினார். இவர் நடித்த சீரியல்களில் ஸ்டார் விஜய்யில் நடித்த பாக்கியலட்சுமி சீரியல் முக்கியமான சீரியல் ஆகும்.

இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தாலும் கூட ரேஷ்மா பசுபுலேட்டிக்கு ஓரளவு வரவேற்பு என்பது கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு நடுவே அடிக்கடி சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசுவதும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதும் வேலையாக வைத்திருக்கின்றார் ரேஷ்மா.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சர்ச்சைக்குரிய பதில்களை அளித்திருக்கிறார் ரேஷ்மா சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியிடம், உடலுறவின் போது கடுமையாக பண்ணுவது பிடிக்குமா..? அல்லது மிருதுவாக பண்ணுவது பிடிக்குமா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி கடுமையாக பண்ணுவது.. மிருதுவாக பண்ணுவது என்பது யாருடன் உறவு கொள்கிறோமோ அதை பொறுத்தது தான்.. எல்லாவற்றுக்கும் மேலாக உடலுறவின் போது இரண்டு பேரின் எமொஷனும் ஒன்றி இருக்க வேண்டும்.

அவர்களுடைய அன்பு உண்மையாக இருக்க வேண்டும் இது தான் மிகவும் முக்கியம் என கூறியுள்ளார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

LATEST News

Trending News

HOT GALLERIES