ஒரே நேரத்தில் 12 நடிகர்களுடன் உறவில் இருந்த ஃபேமஸ் நடிகை?.. அடேங்கப்பா என்ன இமாலய கணக்கா இருக்கு..

ஒரே நேரத்தில் 12 நடிகர்களுடன் உறவில் இருந்த ஃபேமஸ் நடிகை?.. அடேங்கப்பா என்ன இமாலய கணக்கா இருக்கு..

90களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் அவர். தொட்டதெல்லாம் ஹிட்டாகி பிஸியான பட்டாம்பூச்சியாக வலம் வந்துகொண்டிருந்தார் நடிகை. ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை திடீரென அவர் நடித்த படங்கள் அத்தனையும் ஃப்ளாப்பாகின. இதனால் எப்படியாவது மார்க்கெட்டை தக்க வைக்க வேண்டுமென்று முடிவெடுத்த அவர்; அந்த மாதிரியான காட்சிகளில் எல்லாம் நடித்து பார்த்தார். ஆனால் எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. அந்த சமயத்தில் அவர் 12 நடிகர்களுடன் உறவில் இருந்ததாக கிசுகிசுக்கப்படுகிறது. தடபுடலாக நடந்த பிரேம்ஜியின் நிச்சயதார்த்தம்.. நேரில் வாழ்த்திய நண்பர்கள் குழு! பிறக்கும்போதே செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவர் அந்த நடிகை. பல தலைமுறைகளுக்கு உட்கார்ந்து சாப்பிடக்கூடிய அளவுக்கு சொத்து இருந்தது அந்த வம்சத்துக்கு. அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் நாட்டை ஆளவும் செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த நடிகைக்கோ சிறு வயதிலேயே நடிப்பு மீது ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. அதன் காரணமாக எப்படியாவது சினிமாவில் நுழைந்து நாடே கொண்டாடும் மிகப்பெரிய நடிகையாக மாற வேண்டும் என்று சபதம் எடுத்து அதற்காக கடுமையாக உழைக்கவும் செய்தார்.

உழைப்புக்கேற்ற ஊதியமாக ஹிந்தி திரையுலகம் அவருக்கு முதன்முதலாக பட வாய்ப்பை கொடுத்தது. கொள்ளை அழகுடனும், குறையாத திறமையுடனும் நடித்த நடிகைக்கு முதல் படம் சுமாரான பெயரையே பெற்றுக்கொடுத்தது. அதேசமயம் நடிகையின் அழகும், நடிப்பும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்ததை அடுத்து அம்மணிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் படிப்படியாக முன்னேறினார்.

ஹிந்தியில் சுழன்றடித்த அந்த நடிகை புயல் தமிழிலும் தலை காட்டினார். இந்திய அளவில் மதிப்பையும், ரசிகர்களையும் பெற்றிருக்கும் இயக்குநரின் இயக்கத்தில் சர்ச்சைக்குரிய கதையில் நடித்து தமிழில் அறிமுகமானார் நடிகை. அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. நடிகையின் மவுசு தமிழிலும் உயர தொடங்கியது. அந்த மாநில படத்துக்கு பிறகு வரிசையாக தமிழிலும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி முன்னணி இயக்குநர்கள், டாப் ஹீரோக்கள் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் நடிகை.

ஒரே நேரத்தில் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளிலும் கவனம் செலுத்தினார். அந்த ஃபார்முலா சில காலம் கழித்து அவருக்கே எமனாக வந்தது. இதனால் இரண்டு மொழிகளிலுமே அவருக்கு சறுக்கல் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்தாலும் ஒரு படம்கூட அவருக்கு கைகொடுக்கவில்லை. இதனால் அவரது முகத்தை திரையுலகினர் மறக்க ஆரம்பித்தார்கள். ஆனால் மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள அந்த மாதிரியான காட்சிகளிலும் போல்டாக நடித்தார். ஆனாலும் அதுவும் பலனளிக்கவில்லை.

சூழல் இப்படி இருக்க அவருக்கு திடீரென ஒரு நோயும் வந்தது. அது பெரும் இடியாக இறங்கியது. இதற்கிடையே திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகலாம் என்று நினைத்து திருமணமும் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கையும் சில காலத்திலேயே முறிந்தது. அதற்கு காரணம் அந்த நடிகையின் கணவருக்கு நடிகையின் கடந்த கால வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக தெரியவந்ததாம்.

அதாவது, தனது மார்க்கெட் போன சமயத்தில் அதனை தக்க வைத்துக்கொள்ள அந்த மாதிரியான காட்சிகளில் நடித்ததோடு மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட 12 நடிகர்களுடன் உறவில் இருந்தாராம். ஒரே நேரத்தில் 12 நடிகர்களுடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துகொண்டே பட வாய்ப்புகளுக்காக காத்திருந்தாராம். ஆனால் நடிகர்களோ நடிகையை நன்றாக பயன்படுத்திக்கொண்டு கழற்றிவிட்டுவிட்டார்களாம்.

இது நடிகைக்கும் பெரும் மன உளைச்சலை கொடுத்ததால் மது பழக்கத்திற்கு கடுமையாக அடிக்ட் ஆனாராம். அந்தப் பழக்கம் திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்ததால்தான் நடிகையை பிரிந்தாராம் கணவர். 12 நடிகர்களுடன் உறவில் இருந்தபோது பெரும் ஹாட் டாபிக்காக பாலிவுட்டில் ஓடிக்கொண்டிருந்ததாம். மேலும் இது என்ன இமாலய கணக்கா இருக்கே.. ஒரே நேரத்தில் எப்படி 12 நடிகர்களை நடிகை சமாளித்தாரோ என்று இப்போது கிசுகிசுக்கப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES