ஹோட்டல் எல்லாம் வேணாம்.. வீட்டு மாடியிலேயே அதுக்கு தனி செட்டப்.. லேடி சூப்பர் ஸ்டார் ஐடியா..!

ஹோட்டல் எல்லாம் வேணாம்.. வீட்டு மாடியிலேயே அதுக்கு தனி செட்டப்.. லேடி சூப்பர் ஸ்டார் ஐடியா..!

தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. இயக்குனர் ஹரி இயக்கத்தில், நடிகர் சரத்குமார் ஜோடியாக இந்த படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். முதல் படத்திலேயே தன்னுடைய வசீகர அழகாய் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்தார்.

தொடர்ந்து சந்திரமுகி, வல்லவன், கள்வனின் காதலி, யாரடி நீ மோகினி, வில்லு, பில்லா, சந்திரமுகி உள்ளிட்ட பல படங்களில் நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்தார். ஒரு கட்டத்தில் கதாநாயகியை மையப்படுத்திய அறம், மாயா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி செல்வாக்கு பெற்றார்.

அதன் பிறகு நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்தனர். இதற்கிடையே வல்லவன் படத்தில் நடித்த போது ,நடிகர் சிலம்பரசனுக்கும் நயன்தாராவிற்கும் இடையில் காதல் ஏற்பட்டது. ஆனால், ஒரு கட்டத்தில் இவர்களது காதல் பிரேக்கப் ஆனது.

அதைத் தொடர்ந்து, நயன்தாரா சில படங்களில் நடித்தார். வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த போது, படத்தின் இயக்குனர் பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் பிரபுதேவா நயன்தாராவை திருமணம் செய்ய மறுத்து விட்டார். அதனால் அவருடன் காதலும் முறிந்து போனது.

இதையடுத்து, நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த போது டைரக்டர் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதன் பிறகு ஏழு ஆண்டுகள் இருவரும் தீவிரமாக காதலித்த நிலையில், கடந்த ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமான நான்கு மாதங்களில், வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகினர். அந்த குழந்தைகளுக்கு உயிர், உலகம் என பெயர் வைத்து, அந்த குழந்தைகளை அன்பாக வளர்த்து வருகின்றனர்.

கடந்தாண்டின் இறுதியில், அன்னபூரணி என்ற படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். அந்த படம் அவரது 75வது படம். ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. இப்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.

இதற்கிடையே நயன்தாரா அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, நாப்கின் விற்பனை உள்ளிட்ட பிசினஸ்களில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

நடிகை நயன்தாரா நடிப்பை தாண்டி பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். இதனால் இவருக்கு தொழில் நிமித்தமான சந்திப்புகள் அடிக்கடி நடத்த வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இதற்காக நட்சத்திர ஹோட்டல்களை தேர்வு செய்து, தொழில் நிமித்தமான சந்திப்புகளை அங்கு நடத்தி கொண்டிருந்தார் நடிகை நயன்தாரா.

ஆனால், அது தேவையற்ற அலைச்சல் மற்றும் பணவிரயத்தை ஏற்படுத்துகிறது என்பதால், தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில் அலுவலகம் போன்ற ஒரு செட்டப்பை உருவாக்கி இருக்கிறார் நடிகை நயன்தாரா என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தனது பிசினஸ் சந்திப்புகளுக்காக, ஹோட்டல் எல்லாம் வேணாம்.. வீட்டு மாடியிலேயே அதுக்கு தனி செட்டப் செய்துவிடலாம் என்று லேடி சூப்பர் ஸ்டார் ஐடியா செய்து, இந்த அலுவலகத்தை தனது வீட்டு மொட்டை மாடியில் அமைத்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES