காதல் கணவன் பிரிவு.. ரோஜா பிரியங்கா நல்காரி வெளியிட்ட வீடியோ.. ரசிகர்கள் ஷாக்…
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் நடித்த பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி.
இவர் சன் தொலைக்காட்சியில் ரோஜா தொலைக்காட்சியில் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.
அந்த தொடரில் அவரது கேரக்டர் மக்களுக்கு மிகவும் பிடித்தவையாக இருந்தது. சன் தொலைக்காட்சியில் ரோஜா சீரியல் முடிந்த பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சீதா ராமன் சீரியலில் நடிக்க தொடங்கினார்.
இந்த சீரியலில் இருந்தும் பாதியிலேயே வெளியேறிய அவர் திடீரென திருமணமும் செய்துகொண்டார். ஆம், ராகுல் வர்மா என்ற தொழிலதிபரை நீண்ட காலமாக காதலித்து வந்தார்.
அதன் பின்னர் கடந்த ஆண்டு மார்ச் 23ஆம் தேதி எளிமையான முறையில் மலேசியா பத்துமலை முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.
பெற்றோர்கள் எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்து கொண்டதால் பலர் பிரியங்கா நல்காரியை விமர்சித்தனர்.
இதைப் பற்றி பிரியங்கா இன்ஸ்டாகிராமில் தனது பெற்றோர்களின் சம்மதத்தை பெற்று தான் திருமணம் செய்துக்கொண்டதாகவும் ராகுலின் பெற்றோர் மட்டும் திருமணத்தில் மகிழ்ச்சி அடையவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த பிரியங்கா நல்காரி ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நள தமயந்தி என்கிற சீரியலின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.
இதனிடையே சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, கடந்த சில நாட்களாக சோகமான பதிவுகளை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.
ஆம், திருமணம் ஆகி வருடம் வருடம் கூட ஆகாத நிலையில் பிரியங்கா நல்காரி தனது கணவரை பிரிந்துள்ளார்.
அதுமட்டுமின்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனது கணவரின் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டார்.
ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி சில மாதங்களில் விவாகரத்து செய்துவிட்டது அதிர்ச்சியளிக்கிறது.
ஆம், தற்போது கணவரை புரிந்து வாழ்ந்து வருகிறார் பிரியங்கா நல்காரி. தன்னுடைய சூழ்நிலையை சுட்டிக்காட்டும் விதமாக வெளியில் நான் நான் சிரித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால், உள்ளே எனக்குள் வலி இருக்கிறது என்பதை மறைமுகமாக கூறும் விதமாக பையா படத்திலிருந்து ஒரு பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
இதனை பார்த்து ரசிகர்கள் விவாகரத்து லிஸ்டில் நீங்களுமா? அதிர்ச்சியில் உறைந்து அவருக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி வருக்கின்றனர்.