என்னோட மார்பகம் பற்றி அப்படி சொன்னால்.. எனக்கு இது தான் தோன்றும்.. நீலிமா ராணி சுறுக்..!

என்னோட மார்பகம் பற்றி அப்படி சொன்னால்.. எனக்கு இது தான் தோன்றும்.. நீலிமா ராணி சுறுக்..!

நடிகை நீலிமா தேவி ஒரு மிகச்சிறந்த தமிழ்த் திரைப்பட நடிகை என்பதோடு மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களில் அதிகளவு நடித்தவர். இவர் 1992 ஆம் ஆண்டு நடிகர் கமலஹாசன் நடித்த தேவர் மகன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்பட்டார்.

இதனை அடுத்து இவருக்கு பெரிய திரை மற்றும் சின்ன திரையில் வாய்ப்புகள் வந்து சேர அவற்றை சிறப்பான முறையில் பயன்படுத்தி நன்கு நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலம் ஆனார்.

சின்னத்திரை சீரியல்கள் என்றாலே என்று அனைவரையும் கட்டி போட வைக்கக் கூடிய வகையில் ஒவ்வொரு சீரியலின் கதைகளும் இல்லத்தரசிகளின் மனதை தொடும்படி உள்ளது. அந்த வகையில் நீலிமா ராணி 50-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டவர்.

அதுமட்டுமல்லாமல் 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் நான்மகான் அல்ல என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் துணை நடிகைக்கான சிறப்பு விருந்தினை வென்றிருக்கிறார்.

மேலும் இவர் அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் சிறப்பான கதாபாத்திரத்தை செய்து பேமஸ் ஆனவர்.

இவரது சீரியஸாக நடிப்பை சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் நீங்கள் பார்த்திருக்கலாம். தற்போது திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என்று செட்டில் ஆகிவிட்ட இவர் அண்மை பேட்டி ஒன்று பேசிய விஷயம் ட்ரெண்டிங் ஆகி உள்ளது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் நீதிமாதேவி சரியான சவுக்கடியை கொடுத்து இருக்கிறார் என்ற ரீதியில் பேசி வருகிறார்கள். இதற்குக் காரணம் இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்.

இவர் கணவர் பெயர் இசைவாணன் இவர் திரைத்துறையில் இல்லாவிட்டாலும் திரைப்படம் தயாரிக்க வேண்டும் என ஆசைப்பட்டால் இதற்கு நீலிமா ராணியும் இணைந்து உதவி செய்தார்.

 

எனினும் இந்த படம் பாதியிலே நின்று போனது. கிட்டத்தட்ட 4 கோடி ரூபாய்க்கு மேல் கடன் ஆனது. இதை சமீபத்தில் தான் அடைத்து முடித்தோம் என்று ஒரு பேட்டியில் கூட நீலிமா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் என்னுடைய மார்பகங்களை பற்றி கமெண்ட் செய்யும் போது உடனே ஒன்று சொல்ல தோன்றும் அது என்னவென்றால் நான் இன்னும் எனது குழந்தைகளுக்கு பால் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

அல்ப புத்தி கொண்ட அவனுக்கு எல்லாம் பதில் சொல்ல என்ன ஆகப்போகிறது என்று நினைத்து அந்த கமெண்டை டெலிட் செய்து விட்டு சம்பந்தப்பட்ட நபரை பிளாக் செய்து விடுவேன். அது போலவே எனது உடல் எடை பற்றி கேள்வி கேட்பதற்கு நான் எந்த விதமான பதிலையும் தருவதில்லை.


இரண்டு முறை குழந்தைகளை பெற்றதை அடுத்து இரண்டு முறையும் எனது உடலில் மிகப்பெரிய மாற்றங்கள் நடந்திருக்கின்றது. அதையெல்லாம் புரிந்து கொண்டால் இது போல கேள்விகளை யாரும் எழுப்ப மாட்டார்கள். எனவே தான் நான் அமைதியாக இருக்கிறேன் என்ற சவுக்கடி பதிலை தந்திருக்கிறார்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் மிக நாசுக்கான முறையில் இவர் பதில் அளித்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES