பாவாடையை தூக்கு.. அதை பாக்கணும்.. இயக்குனர் குறித்து ரகசியம் உடைத்த ஆண்ட்ரியா…

பாவாடையை தூக்கு.. அதை பாக்கணும்.. இயக்குனர் குறித்து ரகசியம் உடைத்த ஆண்ட்ரியா…

தமிழ் திரை உலகில் வித்தியாசமான குரலின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமாகி அதன் பின் தன் அபார நடிப்பு திறனால் சிறந்த நடிகையாக வளர்ந்தவர் தான் ஆண்ட்ரியா.

இவரது வித்தியாசமான குரலால் பல ரசிகர்களை கட்டிப்போட்ட ஆண்ட்ரியா தனது நடிப்புத் திறனாலும் தமிழக ரசிகர்களின் இதயத்தை கவர்ந்தவர். இவர் பல தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கிறார்.


நடிகை ஆண்ட்ரியா தனது அபார நடிப்புத் திறனை செல்வராகவன் இயக்கத்தில் வெளி வந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் மிகவும் சிறப்பான முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார். எனினும் தமிழ் திரை உலகில் இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் தான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த வடசென்னை திரைப்படத்தில் சந்திரா கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றதோடு நல்ல விமர்சனங்களையும் இவருக்கு பெற்று தந்தது.

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஆண்ட்ரியா தனக்கு நிகழ்ந்த கசப்பான அனுபவங்கள் பற்றி பகிர்ந்து இருக்கிறார். இதில் ஆரம்பத்தில் இயக்குனர்கள் கதையை சொல்லும்போது படத்தில் கிளாமராக நடிக்க வேண்டும் என்பதையோ காட்சிகளைப் பற்றியோ மறைத்து விடுவார்கள்.


ஷூட்டிங் சமயத்தில் இடுப்பில் இருந்து சட்டையை சற்று மேலே தூக்கி காட்டு என்பது போன்ற அட்ஜஸ்ட்மெண்ட்களை செய்யச் சொல்லி வற்புறுத்தும் போது மிகவும் கடுப்பாக இருக்கும் என்பதை பகிர்ந்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இது போன்ற இயக்குனர்கள் இன்னும் இண்டஸ்ட்ரியல் இருக்கத்தான் செய்கிறார்கள். என்னை பொறுத்த வரையில் கதைக்கு தேவைப்படும் பட்சத்தில் அந்த மாதிரி காட்சிகள் கதைக்கு மிகவும் முக்கியமான அல்லது கதையோடு ஒன்றிவரக் கூடிய பட்சத்தில் நான் நடிக்க தயாராக இருக்கிறேன்.

அந்த காட்சிகளை ஏன் கதையில் வைக்கிறார்கள் என்பதற்கு ஒரு உண்மையான காரணம் இருக்க வேண்டும் என்பதை நான் பெரிதும் விரும்புகிறேன். அப்படி காரணம் இருந்தால் நிச்சயமாக நடிகையாக நான் என் கடமையை செய்வேன்.


அதனை விடுத்து விட்டு இது போல கோல்மால்கள் பண்ணக்கூடிய இயக்குனர்களை தனக்கு பிடிக்காது என்றும் இதனால் சிக்கல் ஏற்படும் என்று சில இயக்குனர்கள் பற்றி ரகசியத்தை உடைத்த ஆண்ட்ரியாவின் பேச்சானது தற்போது வைரலாக பரவி வருகிறது.

இதனை அடுத்து இளைஞர்கள் அனைவரும் ஒரு நடிகை என்றால் அவர் அந்த படத்தில் எப்படி இருந்தாலும் நடிப்பேன் என்று கூறுவது வரவேற்கத்தக்கது. அது மட்டுமல்லாமல் கதைக்கு தேவையான பட்சத்தில் கவர்ச்சியோ அல்லது வேறு விதமான நடிப்பையோ வெளிப்படுத்த அவர் தவறவில்லை.

எனினும் அவரை ஏமாற்றி உச்சகட்ட கவர்ச்சியை வேண்டுமென்றே திணிப்பதை விரும்பவில்லை என்பதை மிகவும் அழகான முறையில் தெரிவித்து இருப்பதாகவும் அவரது பேச்சில் அர்த்தம் உள்ளதாகவும் கூறி இருக்கிறார்கள்.


எனவே இந்த பேச்சு பற்றிய விவரங்களை தங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து வருவதோடு ஆண்ட்ரியா கூறிய விஷயத்தில் எந்த அளவு உண்மை உள்ளது என்பதை அவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

மேலும் இது போல எதுவுமே கூறாமல் அத்தகைய காட்சிகளை திணிக்க வைக்க முயற்சி செய்யும் இயக்குனர்களுக்கு ஆண்ட்ரியாவின் பேச்சு ஒரு சரியான சவுக்கடியாக இருக்கும் என கூறலாம்.

LATEST News

Trending News