உன்னோட இந்த உறுப்பில் ஒருத்தன் வந்து குத்துவான்.. அப்போ பாரு.. பிரபலத்தை மிரட்டும் பிக்பாஸ் வனிதா..!

உன்னோட இந்த உறுப்பில் ஒருத்தன் வந்து குத்துவான்.. அப்போ பாரு.. பிரபலத்தை மிரட்டும் பிக்பாஸ் வனிதா..!

அலப்பறைக்கும் அடாவடிக்கும் பெயர் பெற்றவர் வனிதா விஜயகுமார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். சினிமாவிலும் சரி, நேரிலும் சரி எல்லா இடங்களிலும் தனது டெரர் பேஸ் காட்டி, பலரையும் அச்சப்படுத்தி விடுவார் வனிதா விஜயகுமார் என்கிற பிக்பாஸ் வனிதா.

பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு போட்டியாளராக சில ஆண்டுகளுக்கு முன் பங்கேற்ற பிக்பாஸ் வனிதா, பயங்கரமாக வீட்டுக்குள் சண்டை போட்டார். சக போட்டியாளர்களை கலா மாஸ்டர் சொல்வது போல கிழி கிழி என கிழித்தார்.

யாரையும் மதிக்காமல், எடுத்தெறிந்து பேசிய அவரை பார்த்து, விஜய் டிவி பார்வையாளர்களே கிறுகிறுத்துப் போய் விட்டனர்.

சொந்த வாழ்க்கையில் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்துவிட்ட வனிதா, அடுத்து 3வது திருமணத்துக்கு ரெடியாகி விட்டதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார்.

பிக்பாஸ் வனிதா மகள் ஜோவிகா, கடந்த முறை நடந்த பிக்பாஸ் சீசன் 7ல் ஒரு போட்டியாளராக கலந்துக்கொண்டார். தனது மகள் பங்கேற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து, தினமும் யூடியூப் சேனல் ஒன்றில் தினமும் ரிவ்யூ செய்தார் வனிதா.

அப்போது பிக்பாஸ் சீசன் 7 சீசன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மற்ற போட்டியாளர்களாக பூர்ணிமா, மாயா, கூல் சுரேஷ், நிக்ஸன் உள்ளிட்ட பலரையும் சகட்டுமேனிக்கு விமர்சித்தார்.

ஒரு கட்டத்தில், ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீ்ப் குறித்து வனிதா விமர்சித்த நிலையில், நள்ளிரவில் வனிதா விஜயகுமார் தாக்கப்பட்டார். அப்போது கன்னத்தில் காயத்துடன் முகம் வீங்கிய நிலையில், அவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகின.

இந்நிலையில், விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா, அதே சம்பவத்தை நினைவூட்டி, உன்னையும் ஒருத்தன் முகத்துல குத்த வருவான், அவன் நான் அனுப்பிய ஆளாக இருப்பான் என்று நேரடியாகவே மிரட்டினார்.

ஊம் சொல்றியா.. ஊ கூம்.. சொல்றியா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை வனிதா பங்கேற்றார். அப்போது ஏதேனும் ஒரு உணவு பொருள் மூடிய பாத்திரத்தை திறப்பதற்கு பதிலாக 2 உணவு பொருள் பாத்திரங்களையும் வனிதா திறந்து பார்த்தார்.

எனவே போட்டியின் விதிமுறைகளை மீறிய காரணத்தினால் தொகுப்பாளனி பிரியங்கா தேஷ் பாண்டே வனிதாவுக்கு ரெட் கார்டு கொடுக்கிறார்.

அப்போது கோபமான பிக் பாஸ் வனிதா, உன்னுடைய முகத்தில் எவனாவது திடீரென வந்து குத்துவான். அவன் நான் அனுப்பிய ஆளாகவும் இருக்கலாம் என மேடையிலேயே மிரட்டுகிறார்.

கேளிக்கையான இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது

அப்போது என் முகத்துல குத்துவானா என போலியாக அழுதபடி, பிரியங்கா அங்கிருந்த நிகழ்ச்சி தொகுப்பாளரான மாகாபா விடம் செல்கிறார். அப்போது அவர், அதுபத்தி முகம் இருக்கறவங்க தான் கவலைப்படணும், நீ ஏன் கவலைப்படறே எனவும் கிண்டலடிக்கிறார்.

எப்படியிருப்பினும், டிவி நிகழ்ச்சியில், உன்னோட முகத்தில் ஒருத்தன் வந்து குத்துவான்.. அப்போ பாரு என்று பிரியங்காவை மிரட்டும் பிக்பாஸ் வனிதா, ரொம்ப பொல்லாத பெண்தான் என்ற விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES