விவாகரத்தான கணவர் மீது திடுக்கிடும் புகார் அளித்த இசைவாணி!

விவாகரத்தான கணவர் மீது திடுக்கிடும் புகார் அளித்த இசைவாணி!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான இசைவாணி தனது விவாகரத்தான முன்னாள் கணவர் மீது மோசடி புகார் ஒன்றை சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் விவாகரத்தான தனது முன்னாள் கணவர் தனது பெயரை பயன்படுத்தி ஆர்கெஸ்ட்ரா ஒன்றை நடத்தி வருவதாகவும், மேலும் தனது பெயரில் சமூக வலைதள பக்கங்களை உருவாக்கி அதில் மோசடி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

 

மேலும் விவாகரத்துப் பெற்ற பின்னரும் தன்னை மனைவி என்றும் அவர் பலரிடம் கூறி வருவதாகவும் இது குறித்து அவரிடம் கேட்டபோது தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கானா பாடகி இசைவாணி கடந்த 2019ஆம் ஆண்டு சதீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது கடந்து வந்த பாதை என்ற டாஸ்க்கில் இசைவாணி தனக்கு திருமணமானதையோ, விவாகரத்து ஆனதையோ கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES