ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை: நயன்தாராவின் அடுத்த பட இயக்குனரின் பதிவு!

ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை: நயன்தாராவின் அடுத்த பட இயக்குனரின் பதிவு!

நயன்தாராவின் அடுத்த படத்தை பார்க்க வரும் ரசிகர்களுக்கு வழக்கம்போல் ஒரு எச்சரிக்கை என அந்த படத்தின் இயக்குனர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று ’கோல்ட்’. இந்த படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

‘நேரம்’ மற்றும் ’பிரேமம்’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் அடுத்த படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள அல்போன்ஸ் புத்திரன், ‘கோல்ட் படத்தின் எடிட்டிங் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், நேரம் மற்றும் பிரேமம் போன்ற படமல்ல இது என்றும், இது வேறு மாதிரியான படம் என்றும், நல்ல கதாபாத்திரங்கள், நல்ல நடிகர்கள், பாடல்கள் மற்றும் நகைச்சுவையுடன் இந்த படம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ’வழக்கம்போல் ஒரு எச்சரிக்கை என்றும், போரையும் அன்பையும் எதிர்பார்த்து யாரும் இந்த படத்திற்கு வரவேண்டாம்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES