மீண்டும் ஹீரோயினாக களமிறங்கும் சேரன் பட நடிகை - திருமணத்திற்கு பிறகு ரீ என்ட்ரி

மீண்டும் ஹீரோயினாக களமிறங்கும் சேரன் பட நடிகை - திருமணத்திற்கு பிறகு ரீ என்ட்ரி

சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பத்மபிரியா.

இப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம், உள்ளிட்ட படங்களில் நடித்தார்.அதேசமயம் மலையாள திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வந்தார்.

2014 ஆம் ஆண்டு ஜாஸ்மின் ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டு சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மேலும் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மலையாளத்தில் பிஜுமேனன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகை பத்மபிரியா.

இதன்முலம் மீண்டும் ஹீரோயினாகவே மலையாள திரையுலகில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES