தனுஷின் 'D43' படத்தில் இருந்து இயக்குனர் கார்த்திக் நரேன் விலகினாரா?

தனுஷின் 'D43' படத்தில் இருந்து இயக்குனர் கார்த்திக் நரேன் விலகினாரா?

தனுஷ் நடித்துவரும் ‘D43' என்ற திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது என்பதும், இந்த படப்பிடிப்பில் தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் நடித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் இருந்து இயக்குனர் கார்த்திக் நரேன் விலக இருப்பதாக ஒரு செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தனுஷ் மற்றும் இயக்குனர் சுப்பிரமணியம் சிவா இயக்குனர் பணியை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டது. இதனை உறுதி செய்வது போல் நேற்றைய படப்பிடிப்பின்போது கார்த்திக் நரேன் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் இந்த தகவலை படக்குழுவினர் உறுதியாக மறுத்துள்ளனர். கார்த்திக் நரேன் இந்த படத்தில் விலகி இருப்பதாக பரவிவரும் தகவல் முற்றிலும் வதந்தி என்றும் அவர் தான் இந்த படத்தை தொடர்ந்து இயக்கி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளனர். இது எந்த அளவுக்கு உண்மை என்பது போகப்போகத்தான் பார்க்க வேண்டும்.

பிரபல மலையாள திரைக்கதை ஆசிரியர்களான சர்ஃபு மற்றும் சுகாஸ் ஆகியோர் திரைக்கதை எழுதிய இந்த திரைப்படத்தில் தனுஷ் மற்றும் மாளவிகா இருவரும் பத்திரிகையாளர்களாக நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படம் ஒரு எமோஷனல் திரில்லர் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார் என்பதும், தனுஷ் இந்த படத்திற்கான பாடல்களை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES