கணவர், குழந்தைகளுடன் அடர்ந்த காட்டுக்குள் சென்ற தமிழ் நடிகை: த்ரில் வீடியோ
தமிழ் நடிகை ஒருவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அடர்ந்த காட்டுக்குள் சென்று ஜாலியாக இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த ’வாரணம் ஆயிரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. அதன்பின்னர் அவர் நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சில ஹிந்தி மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை சமீரா ரெட்டி கடந்த 2014ஆம் ஆண்டு அக்சய் வர்தே என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது சமீரா ரெட்டி திரை உலகிலிருந்து விலகி விட்டாலும் கணவர், குழந்தைகள் என மகிழ்ச்சியுடன் இருக்கிறார் என்பதும் அவ்வப்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் சமீரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்று மகிழ்ச்சியுடன் ஆட்டம்போடும் காட்சியுடன் கூடிய வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் அவரது கணவரும் அவரும் மரத்தில் தொங்கி உள்ள காட்சியும் உள்ளதை அடுத்து இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.