கார்த்தி படத்திற்காக ரூ.2 கோடியில் பிரமாண்ட செட்: விரைவில் படப்பிடிப்பு

கார்த்தி படத்திற்காக ரூ.2 கோடியில் பிரமாண்ட செட்: விரைவில் படப்பிடிப்பு

நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அது மட்டுமின்றி அவர் ’சர்தார்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே

கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மேற்கண்ட இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது

குறிப்பாக கார்த்தி நடித்து வரும் ’சர்தார்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்திற்காக ரூபாய் 2 கோடியில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த செட்டில் கிட்டதட்ட ஒட்டு மொத்த படத்தையும் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளிப்புற படப்பிடிப்பு நடத்த முடியாததால் ஒட்டுமொத்த படத்தையும் இந்த பிரம்மாண்டமான செட்டில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.

கார்த்தி இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதில் ஒரு வேடம் போலீஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ராஷி கண்ணா, ரஷியா விஜயன், சிம்ரன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை பிஎஸ் மித்ரன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES