நெஞ்சம் மறப்பதில்லை படம் நாளை ரிலீஸ் ஆகுமா ஆகாத? முக்கிய நட்சத்திரம் வெளியிட்ட அறிவிப்பு, இதோ..
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் எஸ்.ஜெ.சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் நெஞ்சம் மறப்பதில்லை. 4 வருடங்களுக்கு முன்னரே வெளியாக வேண்டிய இப்படம், ஒருவழியாக மார்ச் 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே சமீபத்தில் இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது எஸ்.ஜெ.சூர்யா அவரின் ட்விட்டர் பக்கத்தில் "Radiance Media and Escape Artists இரு தயாரிப்பு நிறுவனத்திற்கு இடையே இருந்த பிரச்சனை நீதிமன்றத்தின் உதவியால் நீக்கப்பட்டது.
இப்படத்திற்காக பிராத்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி, நம்ம படம் உண்மையாவே ரிலீஸ் ஆகுதுங்க.." என பதிவிட்டுள்ளார்.
Issue Between Radiance Media and Escape Artists is Sorted , just got cleared by the court THX A LOT TO ALL THE FANS WHO HAVE BEEN PRAYING AND WAITING FOR THIS RELEASE #NenjamMarapathillai NAMMA PADAM UNMAYAVE RELEASE AHUDHUNGA 😍🙏@selvaraghavan @thisisysr @Madan2791 @Arvindkrsna
— S J Suryah (@iam_SJSuryah) March 4, 2021