25 வருஷத்துக்கு பிறகு நடக்கும் நிகழ்வு! முக்கிய நபருடன் இணைந்த பிரபலம்!
நடிகர் அரவிந்த் சாமி லவ் ஹீரோவாக 90 களில் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். சமீபகால வருடமாக வில்லன், நெக்டிவ் ரோல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் அவர் நடித்த தனி ஒருவன் திரைப்படம் அவருக்காக முக்கியத்துவத்தை மீண்டும் உருவாக்கியது.
சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, நரகாசூரன் ஆகிய படங்களில் நடித்திருக்கும் அவர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தலைவி படத்தில் எம்ஜிஆராக நடித்து வருகிறார்.
அடுத்ததாக மலையாளத்தில் பெலினி இயக்கும் படத்தில் நடிகர் குஞ்சக்கோ போபனுடன் இணைந்து நடிக்கிறாராம்.
சஜீவ் இப்படத்திற்கு கதை எழுத 1996 ல் தேவராகம் எனும் படத்திற்கு பின் 25 ஆண்டுகள் கழித்து மலையாள படத்தில் நடிக்கிறாராம்.