நடிப்பு ஆசையில் பெற்றோருக்கு தெரியாமல் மும்பைக்கு ஓடி வந்த நடிகை

நடிப்பு ஆசையில் பெற்றோருக்கு தெரியாமல் மும்பைக்கு ஓடி வந்த நடிகை

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ஹினா கான்ஹேக்ட் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். நடிக்க வந்து 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் ஹினா கான். இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியதாவது,

 

நான் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரை சேர்ந்தவள். என் குடும்பத்தில் நடிகையாவதை யாருமே ஏற்க மாட்டார்கள். கல்லூரியில் படிக்க டெல்லிக்கு அனுப்பவே என் பெற்றோர் தயங்கினார்கள். ஆனால் எப்படியோ என் தந்தையை சமாதானம் செய்தேன்.

 



சீரியலுக்கான ஆடிஷனில் கலந்து கொள்ளுமாறு நண்பர் ஒருவர் சொன்னபோது முடியாது என்றேன். தொடர்ந்து வலியுறுத்தியதால் ஆடிஷனில் கலந்து கொண்டேன். காஸ்டிங் டைரக்டர்களுக்கு என்னை பிடித்துவிட்டது. அடுத்த நாளே ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு தேர்வானேன்.

எனக்கு 20 வயது இருக்கும்போது என் பெற்றோரிடம் சொல்லாமலேயே மும்பைக்கு வந்துவிட்டேன். தயாரிப்பு குழுவினர் நான் தங்க இடம் பார்த்துக் கொடுத்தார்கள். பல வாரங்கள் கழித்து அப்பாவிடம் தெரிவித்தேன். அவர் பயங்கரமாக கோபப்பட்டார். என் அம்மாவின் தோழிகள், உறவினர்கள் எங்களுடனான தொடர்பை அறுத்துக் கொண்டார்கள். அதற்குள் என் சீரியல் பிரபலமாகிவிட்டது.

 



8 ஆண்டுகள் கழித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் ராக்கி ஜெய்ஷ்வாலை காதலிப்பது என் குடும்பத்தாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் நடிகையானதை என் பெற்றோர் ஜீரணித்த நேரத்தில் ராக்கி பற்றி சொன்னதும் அதிர்ச்சி அடைந்தார்கள். என் குடும்பத்தில் அனைவருக்கும் பெரியவர்கள் பார்த்து தான் திருமணம் நடந்தது, நடந்து வருகிறது. ஆனால் தற்போது அவர்களுக்கு என்னை விட ராக்கியை பிடித்துவிட்டது.

 

 



ஸ்ரீநகரில் வளர்ந்த சிறு பெண் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்புக் கம்பளத்தில் நடப்பேன் என்று நினைக்கவில்லை. நான் கேமராவுக்கு முன்பு நிற்கத் துவங்கி 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. பல கடினமான முடிவுகளை எடுத்தே இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். ஆனால் நான் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது என்றார்.

LATEST News

Trending News

HOT GALLERIES