வீட்டின் தலைவரான தாமரையை வம்பிழுக்கும் ப்ரியங்கா..

வீட்டின் தலைவரான தாமரையை வம்பிழுக்கும் ப்ரியங்கா..

இன்றைய எபிசோடின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகிவுள்ளது.

விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவ்னி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.இந்த போட்டியிலிருந்து தவிர்க்க முடியாத காரணத்தால் திருநங்கை நமீதா மாரிமுத்து வீட்டை விட்டு வெளியேறினார். முதல் வாரத்தில் போட்டியாளர்களுக்கு "ஒரு கத சொல்லட்டுமா?" என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மற்றவர்களை கவரும் வகையில் கூற வேண்டும். இதில் சுருதி, இசைவாணி, பாவனியின் கதைகள் போட்டியாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிக்பாஸ் வீட்டில் கதை சொல்லியே இத்தனை நாட்கள் நகர்ந்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது விஜயதசமியை முன்னிட்டு நாடக டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த நாடக டாஸ்க் நிகழ்ச்சி இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாகும் என்பதை உறுதி செய்யும் வகையில் ஏற்கனவே  இரண்டு ப்ரோமோக்கள்  வெளியான நிலையில், தற்போது மூன்றாவது ப்ரோமோவும் வெளியாகிவுள்ளது. இந்த ப்ரோமோவில் ப்ரியங்கா கிச்சன் ஏரியாவில் பாத்திரங்களை கழுவிக்கொண்டே தாமரை அக்காவிடம் ‘பிக்பாஸ் வந்து இந்த வீட்லயே யாரு நல்ல புல்ல, யாரு எல்லா வேலையும் பாக்குற அப்படினு கேட்டா, நீ யார் பேர் சொல்லுவ என்று கேட்க, அதற்கு தாமரை அக்காவோ மூனு பேரும் நல்லாதான் பாக்குறாங்க என்று கூற, ப்ரியங்கா உடனே நீ எனக்கு ப்ரெண்டா இருக்குறதுக்கு எனக்கு எதாவது லாபமா இருக்கணும்ல இப்ப சொல்லு நீ யாரு பேர் சொல்லுவ’ என்று கேட்க தாமரை செல்வி சிரிக்காமல் நாடியா என்று சொல்ல, ப்ரியங்கா பல்பு வாங்கிய மொமெண்டில் தில்லுவாலே புச்சுடேனச்சா என்று பாடுகிறார்.]

 

LATEST News

Trending News

HOT GALLERIES