‘ஜீவி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது

‘ஜீவி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது

ஜீவி படத்தின் முதல் பாகத்திற்கு கதை எழுதிய பாபு தமிழ் தான் இரண்டாம் பாகத்திற்கு கதை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

விஜே கோபிநாத் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் ‘ஜீவி’. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நடிகர் வெற்றியின் நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன. சர்வதேச பட விழாக்களிலும் இப்படத்திற்கு விருதுகள் கிடைத்தன. இதனிடையே, ஜீவி படத்தின் 2-ம் பாகம் உருவாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. 

 

இந்நிலையில், ஜீவி படத்தின் நாயகன் வெற்றி, இதுகுறித்த தகவலை டுவிட்டரில் ரீ-டுவிட் செய்துள்ளார். இதன்மூலம் ஜீவி இரண்டாம் பாகம் உருவாவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. ஜீவி முதல் பாகத்திற்கு கதை எழுதிய பாபு தமிழ் தான் இரண்டாம் பாகத்திற்கு கதை எழுதியுள்ளாராம். 

 

நடிகர் வெற்றி

நடிகர் வெற்றி

 

நடிகர் வெற்றி, இயக்குனர் விஜே கோபிநாத், இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி என முதல் பாகத்தில் பணியாற்றிய அதே கூட்டணியுடன் ஜீவி இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

LATEST News

Trending News

HOT GALLERIES