ஆபாச பட விவகாரத்தில் ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பா? மும்பை போலீஸ் விளக்கம்

ஆபாச பட விவகாரத்தில் ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பா? மும்பை போலீஸ் விளக்கம்

ஆபாச படம் எடுத்து செயலிகளுக்கு விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பு உண்டா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்துள்ளனர்.

மும்பை காவல்துறை அதிகாரிகள் இது குறித்து தகவல் தெரிவித்த போது ’ஆபாச படங்கள் எடுத்த விவகாரத்தில் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்றும் இதுவரை நடந்த விசாரணையில் இந்த விவகாரத்தில் அவரது மனைவி ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளதாகவும் இருப்பினும் மேல் விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே ஷில்பா ஷெட்டிக்கு தெரியாமலேயே ராஜ்குந்த்ரா ஆபாச படங்களை படமாக்கி வெளிநாட்டுக்கு செயலிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார் என்று தெரிகிறது. மேலும் இந்த விவகாரத்தில் ராஜ் குந்த்ராவின் பார்ட்னர் உமேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் இருவரிடமும் தற்போது தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

LATEST News

Trending News

HOT GALLERIES