3 முறை தேசிய விருது வாங்கிய பாலிவுட் பழம்பெரும் நடிகை உயிரிழப்பு!

3 முறை தேசிய விருது வாங்கிய பாலிவுட் பழம்பெரும் நடிகை உயிரிழப்பு!

சிறந்த நடிப்புக்காக 3 முறை தேசிய விருது வாங்கிய பாலிவுட்டின் பழம்பெரும் நடிகை சுரேகா சிக்ரி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 75 என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்தபோது தலையில் அடிப்பட்டு மூளை பக்கவாதத்தால் நடிகை சுரோகா சிக்ரி பாதிக்கப்பட்டார். இதனால் கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவருடைய உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

நடிகை சுரேகா சிக்ரியின் உயிரிழப்பை தொடர்ந்து திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த 1978 ஆம் ஆண்டு “கிசா குர்சி கா” எனும் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை சுரேகா சிக்ரி அதற்குப் பின்னர் பல வெற்றிப்படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் கடந்த 1988 இல் வெளியான “தமஸ்”, 1995 இல் வெளியான “மம்மோ”, 2018 இல் வெளியான “பதாய் ஹோ” போன்ற படங்களில் நடித்து, அதன் சிறந்த நடிப்புக்காக 3 முறை துணை நடிகைக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.

மேலும் இந்தி தொலைக்காட்சிகளில் வெளியான பல பிரபல தொலைக்காட்சி தொடர்களில் தொடர்ந்து நடித்து வந்த இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

நடிகை சுரேகா சிக்ரி நடித்து இருந்த வெற்றிப்படமான “பதய் ஹோ” திரைப்படத்தைத்தான் தமிழில் தற்போது நடிகர் ஆர்.ஜே.பாலாஜி “வீட்ல விசேசங்க” எனும் பெயரில் இயக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES