சந்தானம் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு: ஃபர்ஸ்ட் சிங்கில் விரைவில்!

சந்தானம் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு: ஃபர்ஸ்ட் சிங்கில் விரைவில்!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த நடிகர் சந்தானம் கடந்த 5 ஆண்டுகளாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த ’தில்லுக்கு துட்டு’ ’சக்க போடு போடு ராஜா’ ’தில்லுக்குதுட்டு 2’ உள்ளிட்ட ஒருசில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது அவர் ’டிக்கிலோனா’ உள்பட ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது தெரிந்தது. இந்த நிலையில் சந்தானம் நடிப்பில் இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் ’பாரீஸ் ஜெயராஜ்’. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படப்பிடிப்பின் இறுதிநாளில் சந்தானம் உள்பட படக்குழுவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து கேக் வெட்டிய புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் வெளிவரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சந்தானம் நடித்த ’டிக்கிலோனா’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது ’பாரீஸ் ஜெயராஜ்’ திரைப்படமும் விரைவில் ரிலீசுக்கு தயாராகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES