பிறந்த நாளன்று எளியோர்களுக்கு பிரியாணி விருந்தளித்த தமிழ் நடிகை!

பிறந்த நாளன்று எளியோர்களுக்கு பிரியாணி விருந்தளித்த தமிழ் நடிகை!

கோலிவுட் திரையுலகில் உள்ள நடிகர், நடிகைகள் பலர் தங்களுடைய பிறந்த நாளை வெளிநாட்டிலும் ஸ்டார் ஓட்டல்களிலும் பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர். ஒருசிலர் விதிவிலக்காக ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்யும் வகையில் முதியோர் இல்லங்களிலும், சிறுவர் இல்லங்களிலும் உள்ளவர்களுக்கு உணவு உடை கொடுத்து தங்களுடைய பிறந்த நாளை அர்த்தமுள்ள நாளாக்கி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் நடிகை சாந்தினி தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடிய நிலையில் அவர் முதியோர் இல்லங்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் பிரியாணி விருந்தளித்தார். ஏழை,எளிய மக்கள் சாந்தினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி அந்த பிரியாணியை சுவைத்து மகிழ்ந்தனர்.

 

ஏழை எளியோர்களுக்கு பிரியாணி விருந்தளித்து பிறந்த நாள் கொண்டாடிய நடிகை சாந்தினிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES