கையில் ஆஸ்கார் விருதுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பலரும் பார்த்திராத அரிதான புகைப்படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவருக்கு உலகமெங்கிலும் அதிகபடியான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கபட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இன்று காலை இந்திய திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது.
இதனால் திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் ரஜினிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கையில் ஆஸ்கார் விருதை வைத்துக்கொண்டு நிற்கும் பலரும் பார்த்திராத அரிதான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
மேலும் தமிழ் திரையுலகில் இதுவரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மட்டுமே ஆஸ்கார் விருதினை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.